Friday, May 3, 2024
Home » வவுனியா, மன்னார் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மழை

வவுனியா, மன்னார் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மழை

- சில இடங்களில் பிற்பகலில் இடியுடன் மழை

by Rizwan Segu Mohideen
April 20, 2024 7:34 am 0 comment

– இடி, மின்னலிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், ஊவா, மத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம், வவுனியா, மன்னார், காலி, மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT