பதுளை வெலிமடை வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பிரதேசத்தில் நேற்று (19) பிற்பகல் அரிசி லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில், இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து வெலிமடை நோக்கி அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற இந்த லொறியில் மூன்று பேர் பயணித்ததாகவும் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன போது லொறி கவிழ்ந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரைக்கமைய, அடம்பிட்டிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
(பதுளை நிஷாந்த அபேகுணவர்தன)