Friday, May 3, 2024
Home » பதுளை – வெலிமடை வீதியில் அரிசி லொறி கவிழ்ந்து விபத்து

பதுளை – வெலிமடை வீதியில் அரிசி லொறி கவிழ்ந்து விபத்து

இருவர் படுகாயம்

by gayan
April 20, 2024 2:30 am 0 comment

பதுளை வெலிமடை வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பிரதேசத்தில் நேற்று (19) பிற்பகல் அரிசி லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில், இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து வெலிமடை நோக்கி அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற இந்த லொறியில் மூன்று பேர் பயணித்ததாகவும் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன போது லொறி கவிழ்ந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரைக்கமைய, அடம்பிட்டிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(பதுளை நிஷாந்த அபேகுணவர்தன)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT