நீரிழிவு நோயால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிவதற்கான விசேட கணக்கெடுப்பு எதிர்வரும் நாட்களில் நடத்தப்படுமென, சமூக மருத்துவ நிபுணர் ஷெரின்
பாலசிங்கம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி அண்மையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடற்பருமன், உயரத்துக்கேற்ற எடை இல்லாமையாகிய 02 காரணிகள் கண்டறியப்பட்டதுடன், நகர்ப்புறங்களிலுள்ள பெரும்பாலான பிள்ளைகள் இந்தக் காரணிகளால் உயிரிழந்தமையும் தெரியவந்துள்ளதாகவும், அவர் கூறினார்.
ஆகையால் நீரிழிவு நோயால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிய விசேட கணக்கெடுப்பை நடத்த தாம் தீர்மானித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறிருக்க பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தொடர்பாக சுகாதார அமைச்சால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஆலோசனை தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.