Home » வங்கியில் கடன் பெறுவதற்கு பிணத்துடன் வந்தவர் கைது

வங்கியில் கடன் பெறுவதற்கு பிணத்துடன் வந்தவர் கைது

by Gayan Abeykoon
April 19, 2024 9:36 am 0 comment

பிரேசிலில் சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த ஆடவருக்குக் கடன் வாங்க வங்கிக்குச் சென்ற பெண்ணைக் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எரிக்கா வியரா நுவினிஸ் என்ற பெண் 68 வயது ஆடவரை வங்கிக்கு அழைத்து வந்தார். அவருடைய பெயரில் கடன் கேட்டதும் வங்கி ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அவர்கள் உடனடியாக அவசரச் சேவைகள் பிரிவுக்கு அழைப்பு விடுத்தனர்.

வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வீடியோவில் நுவினிஸ் அந்த ஆடவரைப் பிடிக்காத நேரத்தில் அவரது தலை பின்னால் சாய்வது தெரிந்தது.

‘உங்களுக்குக் கேட்கிறதா? நீங்கள் கையெழுத்திட வேண்டும்’ என்று நுவினிஸ் அந்த ஆடவரிடம் பேசுவது வீடியோவில் பதிவானது. ‘அவர் எதுவும் பேசமாட்டார்.. அவர் அப்படித்தான்’ என்று நுவினிஸ் கூறினார்.

அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வங்கிக்கு வந்தனர். அந்த ஆடவர் இறந்துவிட்டதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.நுவினிஸ் அந்த ஆடவரின் பெயரில் சுமார் 3,250 டொலர் கடன் வாங்க முயன்றுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT