களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான பாலித தெவரப்பெருமயின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அட்டுலுகமையில் பல்வேறு இடங்களிலும் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மறைந்த முன்னாள் அமைச்சர் பாலிததெவரப்பெரும பண்டாரகமையில் உள்ள அட்டுலுகமை கிராம மக்களுடன் அன்பாகப்பழகி நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தான் இதற்கான காரணம் என பலரும் தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் அட்டுலுகம கிராமம் தனிமைப்படுத்தப்பட்டபோது அந்த கிராம மக்களுக்கு தெவரப்பெரும செய்த உதவி ஒத்தாசைகளை அக்கிராம மக்கள் மறக்காமல் நன்றி உணர்வுடன் இன்று செயற்படுத்தியுள்ளது. இதுதான் இதற்கான காரணம் என்றும் அட்டுலுக்கமை கிராம மக்கள் தெரிவித்தனர்.
(மொறட்டுவை மத்திய விசேட நிருபர்)