340
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருவதுடன், சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் துறையில் ஈடுபடுபவர்களும் மிகவும் ஆர்வத்துடன் தமது தொழிலை முன்னெடுத்துள்ளனர்.
வசந்தகாலம் நிலவும் இந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதுடன், அவற்றின் இயற்கை அழகையும் கண்டு களிக்கின்றனர்.
அத்துடன் சித்திரைப் புத்தாண்டையிட்டு கிராமங்களில் நடைபெறும் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் காண்கின்றனர்.
பாண்டிருப்பு தினகரன் நிருபர்