நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட சிங்களமொழி தொடர்பாடல் பயிற்சியை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அப்பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
100 மணித்தியாலங்களை கொண்டதாக இப்பயிற்சி நடத்தப்பட்டதுடன், இதில் இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு நன்மையடைந்தனர். இப்பயிற்சிநெறியின் வளவாளராக சுதேஷ் ருஷாந்தன் செயற்பட்டார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வழிகாட்டலின் கீழ் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் ஏ.ஆன்ஸி யுரேமினியின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
காரைதீவு குறூப் நிருபர்