களுத்துறை வீடொன்றில் வசித்து வந்த வயோதிப சகோதரிகள் இருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்நத 79 வயதான எம்.ஜி.பிலிபினா மற்றும் 65 வயதான டி.எம்.மேரி கெத்தரின் மான்சிஸ் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் காண்பட்ட வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக 119 பொலிஸாரின் அவசர தொலைபேசி ஊடாக தகவல் வழங்கப்பட்டது.இதையடுத்து வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அங்கு சடலங்கள் கிடப்பதை அவதானித்தனர். இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்னறர்.