Friday, May 17, 2024
Home » கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு

கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு

by mahesh
April 10, 2024 11:10 am 0 comment

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் உதவி தேவைப்படும் சிரேஷ்ட கலைஞர்களுக்கு உதவித்தொகை நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிரேஷ்ட கலைஞர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பாரம்பரிய கலைகளில் திறமையை வெளிக்காட்டிய உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு 2024 ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. சிரேஷ்ட கலைஞர்கள் இலக்கியம், நாடகம், நாட்டுக்கூத்து, சிற்பம், நடனம், ஓவியம் போன்ற பாரம்பரிய துறைகளில் திறமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கணக்காளர் ஜேர்ச் ஆனந்தராஜ், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜெயகுமார், கலாசார உத்தியோகத்தர் ஜே.ரதிதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT