Monday, May 20, 2024
Home » அம்பாறையில் சிறுபோக நெல் விதைப்பு மும்முரம்

அம்பாறையில் சிறுபோக நெல் விதைப்பு மும்முரம்

by mahesh
April 3, 2024 1:55 pm 0 comment

அம்பாறை மாவட்ட வயல்வெளிகளில் சிறுபோக நெல் விதைப்பு வேலை மிகவும் மும்முரமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சவளக்கடை பிரதேசத்தில் இம்முறை 9,372 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அக்கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோதன் தெரிவித்தார்.

விவசாயச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டமைக்கமைய இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விதைப்பு வேலை முடிவடைய வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த பெரும்போகத்தின் போது, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 113 விவசாயிகளின் பெயர், நட்டஈடு வழங்குவதற்காக கமநல காப்புறுதிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT