Thursday, May 30, 2024
Home » அட்டாளைச்சேனையில் இப்தார் நிகழ்வு

அட்டாளைச்சேனையில் இப்தார் நிகழ்வு

by mahesh
April 3, 2024 1:35 pm 0 comment

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு, அட்டாளைச்சேனை பெரோனா பீச் வில்லா விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக சுகாதார மருத்துவர் கே.எல்.எம்.நக்பார் தலைமையில் கடந்த ஞாயிறு (31) நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஷகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.வேதநாயகம், திருகோணமலை மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி அஷ்ஷெய்க் என்.எம்.அப்துல்லா, கல்முனை மாவட்ட நீதிபதி எம்.எல்.எ.சம்சுதீன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி அதிபர் எ.எல்.எம்.அஷ்ரப் மார்க்க சொற்பொழிவாற்றியதுடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஷகீலா இஸ்ஸதீனின் சேவையை பாராட்டி அட்டாளைச்சேனை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரி பறூஸா நக்பர் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தார்.

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT