104
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையின் கீழ் அட்டாளைச்சேனையில் தெரிவு செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காசோலை வழங்கி வைக்கப்பட்டது. தலா 3,000 ரூபா பெறுமதியான காசோலை ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அதன் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹிஜா முசாபிரினால் பயனாளிகளுக்கு இக்காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஹஸ்பியாவும் கலந்து கொண்டார்.
திராய்க்கேணி தினகரன் நிருபர்