258
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்றது.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டதுடன், இந்த வீட்டுத்திட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு உருவாக்கப்பட்ட பள்ளிவாசலே முகைதீன் பள்ளிவாசலாகும்.
இந்த இப்தார் நிகழ்வில் பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு உதவி செய்தவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகளாகிய பலரும் கலந்துகொண்டனர்.
பெரியநீலாவணை விசேட நிருபர்