Friday, May 17, 2024
Home » ஞானசார தேரருக்கு பிணை வழங்க கோரிய மனு நிராகரிப்பு

ஞானசார தேரருக்கு பிணை வழங்க கோரிய மனு நிராகரிப்பு

by mahesh
April 3, 2024 6:00 am 0 comment

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தனது சேவை பெறுபவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை மனு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன்போதே உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த மனுவை நிராகரித்தார்.கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்துக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக, அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT