Sunday, April 28, 2024
Home » தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க விரைவில் வேலைத் திட்டம்

தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க விரைவில் வேலைத் திட்டம்

அதிகாரிகளிடம் அமைச்சர் மனுஷ பேச்சு

by Gayan Abeykoon
March 29, 2024 9:54 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும்  வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில்,தொழில் அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. தொழிற்சங்க உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட இப்பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த யோசனை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

தோட்டத் தொழிலாளர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை, தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.  பிரேரணை தொடர்பிலான காரணங்களை   ஏற்றுக்கொள்ள முடியாதென தோட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்த நிலையில், நாளாந்த சம்பள உயர்வை வழங்குமாறு தொழிற்சங்கங்கள்  வலியுறுத்தின. இதற்கு பதிலளித்த அமைச்சர், தன்னால் கொண்டுவரப்படவுள்ள  புதிய தொழில் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின்  தொழில் உரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  சுட்டிக்காட்டினார். —

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT