இலங்கை கடற்பரப்புக்குள்அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 தமிழக மீனவர்கள்,ஐந்து விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். தமிழக மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன்பிடிக்க வந்த இவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் மூன்று படகுகளுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களும் மன்னார் கடற்பரப்பில் இரண்டு விசைப்படகுகளுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 07 தமிழக மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கும் மன்னார் கடற்படை முகாமுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 05 படகுகளுடன் மன்னார் மற்றும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று (21) ஒப்படைத்துள்ளனர்.