தினகரனின் 92 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் லேக்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது. தினகரன் பத்திரிகையில் நீண்டகாலம் ஊடகத்துறையில் பணியாற்றிய ஊடகத் துறைசார்ந்தவர்களும் தினகரன் பத்திரிகையுடன் நெருங்கிப் பயணிக்கும் சமூகப் பணியாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சபைத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் முன்னிலையில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபத்தின் ஆலோசகர் ஹாசிம் உமர், லேக் ஹவுஸ் வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் பீட பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நீண்டகாலம் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் ஊடக பணியாற்றிய பி. பாலசிங்கம், பி. இக்மன் பிரியங்க, எம். ஜே. எம். தாஜுதீன், ஆனந்திபால சிங்கம், எம். எம். ஐ. ரஹ்மான் உள்ளிட்டவர்கள் தினகரன் 92 ஆண்டு நினைவுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, தேசமானிய எஸ் முத்தையா, தேசமானிய பி. பழனியப்பன், தேசமானிய டப்ளியூ. எம். எம். எஸ்.எம். கமால்தீன், பி. குமாரதாஸ், எம். சுந்தரமூர்த்தி, டப்ளியூ எம். என். நாஜிம், தேசமானிய வி. சிதம்பரநாதன், எம். எஸ்.எம். பாஹிம். ஏ.பி.எம். ஹுஸைன், அவ்லர்டீன் முஹமட் அனஸ், நந்தினி மனோகரன், வைத்தியர் எச். எம். ஏ. தி. எம். விஜயசேகர, வைத்தியர் கே. தி. என். பிரசாத் ரனவீர, நடேசன் நாகேந்திரன், திருமதி சஹானா இன்பராசா, மோகனதாஸ் திபாகர், எழுத்தாளர் வணபிதா சரவணமுத்து பெனடிக் (பெனி), இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவுப் பணிப்பாளர் சி. பி. எம் சியாம் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
tkn-03-20-pg07-R1