109
யுக்திய விசேட போதையொழிப்பு நடவடிக்கையின் கீழ், காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில், 735 மதன மோதக லேகியங்களுடன் 35 வயது நபரொருவர் டெலிகொம் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்நபர் கடந்த (17) வாகனத்துடன் கைதானார். இவரிடமிருந்து 735 லேகிய பக்கெட்டுக்கள் மீட்கப்பட்டன. இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.