145
இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் பிரபல செயலூக்கப் பேச்சாளர் முனைவர் சரண்யா ஜெய்குமார் பங்கேற்ற செயலூக்க உரை அண்மையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடக்கவுரையை இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தின் இணைப்பாளர் லண்டனைச் சேர்ந்த பொறியியலாளர் இணுவிலூர் நடராசா சச்சிதானந்தம் ஆற்றினார். நிறைவுரையை லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சிவாப்பிள்ளை ஆற்றினார். நிகழ்வில் தற்கால மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் கையாளவேண்டிய உத்திகள் என்ற தொனிப்பொருளில் முனைவர் சரண்யா ஜெய்குமார் உரையாற்றினார்.