137
கிளிநொச்சியில் ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் மகளிர் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டிணைவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்றலிலிருந்து எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு கிளிநொச்சி பசுமை பூங்காவளாகத்தைச் சென்றடைந்து அங்கே நிகழ்வுகள் நடைபெற்றன. வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பெண்களமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்-.
பரந்தன் குறூப் நிருபர்