173
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில், போதைப் பொருள் உட்கொண்ட இளம் சோடி, உயிரிழந்தது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இவ்விருவரும் உயிரிழந்தனர். முல்லேரியா, உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அழகு நிலையத்தின் முகாமையாளரான ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி (வயது 27) தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க பெர்னாண்டோ (வயது 22) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது பற்றி, மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.