Monday, May 20, 2024
Home » பன்னூலாசிரியர் மதினா உம்மாவின் இரு நூல்கள் அக்கரைப்பற்றில் வெளியீடு

பன்னூலாசிரியர் மதினா உம்மாவின் இரு நூல்கள் அக்கரைப்பற்றில் வெளியீடு

by manjula
March 5, 2024 8:38 am 0 comment

அக்கரைப்பற்று பன்னூலாசிரியர் எம். ஐ. மதினா உம்மாவின் 16ஆம், 17 ஆம் நூல்களான கவிதைத் தொகுப்புகள் அடங்கிய ‘வாழ்வை நிகர்த்த வானவில்’ மற்றும் ‘கலை’ ஆகிய இரு நூல் வெளியீட்டுவிழா அண்மையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சேவையர் ஏ.முகைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு ஆய்வாளர் சிராஜ் மக்ஷுர் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலாளர்களான அல்ஹாபீல் எம். எஸ். எம். றஸ்ஸான் மற்றும் ஏ.சி. ஏ அப்கர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் ஹையூம், எழுத்தாளர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நூல்நயவுரையை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் அ. ஸ. அஹமட் கியாஸ் நிகழ்த்தினார்.

இதேவேளை நூலின் முதல் பிரதி நூலாசிரியரால் யூ. எல். அஹமட் மஸாஹிருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் நூலாசிரியருக்கு அக்கரையூர் அப்துல் குத்தூஸ் தம்பதியர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி வைத்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT