Monday, May 20, 2024
Home » தரமற்ற ஊசி மருந்து இறக்குமதி; சமன் ரத்நாயக்க விசேட வாக்குமூலம்

தரமற்ற ஊசி மருந்து இறக்குமதி; சமன் ரத்நாயக்க விசேட வாக்குமூலம்

by Prashahini
March 4, 2024 11:49 am 0 comment

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க இன்று (04) விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவுள்ளார்.

மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம விடுத்த உத்தரவின் பிரகாரம் அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற ஊசி மருந்து குப்பிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, மறுநாள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது, தமக்கு வாக்குமூலம் வழங்க சந்தர்ப்பம் வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக அவர் நீதவானிடம் கோரியிருந்த நிலையில், நீதவான் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT