150
அக்கரைப்பற்று லொட்ஸ் விளையாட்டு கழகத்தின் 7ஆவது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் நேற்று முன்தினம் (27) நடந்த இறுதிப் போட்டியில் வேஸ்ட் இலவன் அணியை எதிர்கொண்ட சோபர் அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து நிர்ணயித்த 28 ஓட்ட இலக்கை எட்டியது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக சோபர் அணியின் றப்சானும், தொடரின் சிறந்த வீரராக சோபர் அணியின் அஸ்ஜாதும் தெரிவாகினர்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்