165
இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக விமானம் ஒன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்க இராஜதந்திரி டொலாண்ட லியு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு ‘கிங் எயார்’ விமானமொன்றை வழங்க வுள்ளதாக குறிப்பிட்டார். இவ்விமானம் இவ்வருடத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா இதற்கு முன்னர் இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக கடற்படையினருக்கு படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.