Thursday, May 16, 2024
Home » ஷெமார் ஜோசபுக்கு ஐ.சி.சி. கெளரவம்

ஷெமார் ஜோசபுக்கு ஐ.சி.சி. கெளரவம்

by Gayan Abeykoon
February 15, 2024 8:16 am 0 comment

 ஐ.சி.சியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதினை மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷெமார் ஜோசப் வென்றுள்ளார். 

இதன்மூலம் ஐ.சி.சியின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெறும் முதல் மேற்கிந்திய தீவுகள் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. இந்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இங்கிலாந்தின் ஒல்லி போப் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரரான ஷெமார் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT