பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வுடன் இணைந்ததாக நடைபெற்ற, ஊவா மாகாண பிரதான நிகழ்வு நேற்றைய தினம் (14) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் பண்டாரவளை பிதுனுவெவ சந்தியில் அமைந்துள்ள திகுல்பத ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் அடையாளரீதியாக பாடசாலை மாணவர்களுக்குச் சீருடைகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன தெனிபிடிய, மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ், மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச உள்ளிட்ட அதிகாரிகள், அண்மித்த பாடசாலைகளின் அதிபர்கள் உட்படப் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.