பல திறமைத் தேடல்களை நடத்தி இன்று மேடைகளில் பாடும் பல பாடக ,பாடகிகளை அறிமுகப்படுத்திய சக்தி TV இன் மிக பிரம்மாண்டமான அடுத்த பயணம் ஆரம்பமாகின்றது.
சர்வதேச தரத்தில், புதிய பரிணாமத்தில் அடுத்த தலைமுறைக்கான இசைப்பயணம் சக்தி Crown எனும் நாமத்துடன் அரங்கேற காத்திருக்கிறது. நாடுபூராகவும் சென்று பாடும் திறமைகளை அடையாளங்கண்டு அவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மேடையில் பாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கி எதிர்கால இலங்கையின் இசை வாரிசுகளை அறிமுகப்படுத்த சக்தி TV தயாராகிறது.
இலங்கையின் இசைத்துறையை அதிரவைக்க காத்திருக்கும் சக்தி Crown உள்நாட்டிலும் ,சர்வதேசத்திலும் இம்மாதம் 8ஆம் திகதி முதல் களம் பதிக்க காத்திருக்கிறது. ஆரம்ப அறிமுகச்சுற்றுக்களை தொடர்ந்து மேடைச்சுற்றுக்களில் போட்டியாளர்களை வழிநடத்த நம் நாட்டின் மூன்று திறமைமிக்க வழிகாட்டிகளான சாஹித்யா கஜமுகன், சந்துரு ராஜசூரியர் மற்றும் ஸ்ரீராம் சச்சி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதோடு, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த இசை வித்தகர்கள் வாகீசன் சிவநாதன், பானு தீபன் மற்றும் மதுஸ்ரீ ஆதித்தன் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றவுள்ளனர்.
இளமை துள்ளும் இந்த திறமைத்தேடலை இளையவர்கள் மனங்கவர்ந்த AR யசோதரன் மற்றும் இளம் பாடகி மாதுவி ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர். இந்நிகழ்ச்சி வாரஇறுதி நாட்களில் இரவு 8.30மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கை இசை துறையில் அடுத்த தலைமுறைக்கான புதிய பயணத்தில் இணைந்து உலக தரம் வாய்ந்த பாடகர்களாக உங்கள் பயணத்தை தேசத்தின் சக்தியான சக்தி TV உடன் ஆரம்பியுங்கள்.