Wednesday, May 15, 2024
Home » இராணுவத்தினரின் மருத்துவ உதவிக்காக புதிய திட்டம் அறிமுகம்

இராணுவத்தினரின் மருத்துவ உதவிக்காக புதிய திட்டம் அறிமுகம்

- நலன்களை மேம்படுத்த மேலும் பல புதிய திட்டங்கள்

by Prashahini
February 15, 2024 3:28 pm 0 comment

எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக, இராணுவ உறுப்பினர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நலன்புரி அறக்கட்டளையில் உறுப்புரிமைப் பெற்றுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தீவிர அறுவைச் சிகிச்சைகள் மற்றும் தீவீரமற்ற அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள ‘கேஸ்லெஸ் மெடி கிளைம்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 33 தனியார் வைத்தியசாலை வலையமைப்புகளின் ஊடாக, இன்று முதல், இராணுவ உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிதியத்தில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற போர் வீரர்களும் இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் ஆசிரிய வைத்தியசாலை ஹோல்டிங்ஸ் பிஎல்சி, தேவைப்படும் வீரர்களின் குழந்தைகளுக்காக மாதாந்தம் இரண்டு இருதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

இராணுவத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரின் நலனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல நிகழ்ச்சிகள் இன்று (14) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றன.

இத்திட்டத்துடன் தொடர்புடைய சுவாசஹன காப்புறுதி நிதியத்தின் கீழ் வைத்தியசாலை கட்டணங்களை நேரடியாக செலுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுதல் மற்றும் பரிமாற்றம் இராணுவ தளபதி மற்றும் வைத்தியசாலை பிரதிநிதிகளின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய படையினரின் 635 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் போர் வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் கல்வியை இலகுபடுத்தும் வகையில் பெறுமதியான ‘கற்றல் நண்பன்’(Study Budy) எனும் 300 இணைய விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT