முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையாகியுள்ள சாந்தன் இலங்கை திரும்புவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு புதிய கடவுச்சீட்டு தேவைப்பட்டதால் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கமைய கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் நாட்களில் இந்திய அரசாங்கத் தரப்பால் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் தனது சொந்த நாட்டுக்கு தன்னை அனுப்புமாறு கோரியிருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.