வர்த்தக வங்கிகளுக்கு குறுகிய கால கடன் வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கமைய இம்மாதம் 16ஆம் திகதி முதல் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், மத்திய வங்கி தெரிவித்தது.
இலங்கை மத்திய வங்கியால், கடந்த வருடம் ஜனவரி 16ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன் வழங்குவது தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய வங்கி தீர்மானம் எடுத்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் சந்தையில் வட்டி வீதம் வீழ்ச்சியடையும் வேகம் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.