Monday, May 20, 2024
Home » மண்முனை தென்எருவில்பற்றில் பொங்கல் விழா

மண்முனை தென்எருவில்பற்றில் பொங்கல் விழா

by mahesh
February 7, 2024 12:30 pm 0 comment

மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகம், துறைநீலாவணை மக்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச பொங்கல் விழா – 2024 அப்பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (05) சிறப்பாக நடைபெற்றது.

துறைநீலாவணை தில்லையம்பல பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து கதிர் அறுவடை நடைபெற்று நெற்கதிர்கள் துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. கலாசார விழுமியங்களுடன் பண்பாட்டு பவனியாக கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களை கட்டடித்து, நெல் தூற்றப்பட்டு, நெல் குற்றப்பட்டு, பொங்கல் பானையில் புத்தரிசி இடப்பட்டு பொங்கல் நிகழ்வு இனிதே நடைபெற்றது. இதன்போது, கண்ணகை அம்மன் ஆலய நிருவாகத்தினரால் அம்மன் புகழ் பாடும் இறுவட்டும் வெளியிடப்பட்டது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT