கொழும்பில் கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சில வீதிகள், திருத்த வேலைகள் காரணமாக கட்டம் கட்டமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பெனி வீதி பிரதேசங்களில் உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகள் இன்று முதல் சில கட்டங்களாக மூடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீதிகளை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாநகர பொறியியலாளர்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இன்று முதல் எதிர்வரும்19 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தையிலிருந்து ரயில் கடவை வரையான வீதிப் பகுதி மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தையிலி ருந்து பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதிகள் மூடப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் கட்டமாக மார்ச் 5 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தையிலிருந்து பெரஹெர மாவத்தைக்கு அருகிலுள்ள ரொட்டுண்டா கார்டன் சந்தி பகுதி வரையான வீதி மூடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்