கண்டி – யாழ். உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஏ. நடராஜன் எழுதிய ‘பொரம் த விலேஜ் டு த குளோபல் ஸ்டேச்’ (அனுபவ வாழ்க்கைக் குறிப்பு) ஆங்கில நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 03 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 4.00 மணி முதல் 5.30 மணிவரை பேராதனை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கலந்து சிறப்பிக்கவுள்ளார். நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
நிகழ்வில் வரவேற்புரையை சமூக செயற்பாட்டாளர் முத்தையாபிள்ளை ஸ்ரீகாந்தன், நூல் நயவுரையை பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் நெலும் தீபிகா உடகம, நூல் அறிமுகவுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் பி.எஸ்.அபயக்கோன் மற்றும் பேராதனை பல்கலைக்கழ பேராசிரியர் வி. மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். ஏற்புரையை நூலாசிரியரும் ஓய்வுபெற்ற உதவித் தூதுவருமான ஏ. நடராஜன் நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வில் கண்டி தமிழ் வர்த்தக சங்கம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், மத்திய மாகாண இந்த மாமன்றம், கண்டி இந்து இளைஞர் மன்றம், கண்டி தமிழ்ச் சங்கம், கண்டி முத்தமிழச் சங்கம், மாத்தளை மகாத்மா காந்தி சபை, மாத்தளை தமிழ் இலக்கிய மன்றம், மலையக கலை – கலாசார (இரத்தின தீபம்) சங்கம், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் என்பனவற்றின் பிரதிநிதிகள், அசோகா குரூப் நிறுவனத் தவிசாளர் பி.டி.ஆர். ராஜன், சன்ரயிஸ் பிஸ்கட் நிறுவன பணிப்பாளர் தொழிலதிபர் எஸ்.முத்தையா ஆகியோர் கலந்து கொள்வர்.
இக்பால் அலி