இலங்கையின் பாரிய முன்னணி வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனம் உள்நாட்டின் வாகனத்தொழில்துறையில் மாத்திரமன்றி போக்குவரத்துத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்திய தனது 30வருட நிறைவை அண்மையில் கொண்டாடியது.
இலங்கையில் உள்ள ஏறத்தாழ அனைத்து குடிமக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவகையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில், பொருளாதாரச் சிக்கனமான மற்றும் சௌகரியம் மிக்க போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதன் ஊடாக இந்நாட்டின் வாகனத் தொழில்துறையின் புத்தாக்கத்தின் உந்துசக்தியாக DPMC காணப்படுகிறது.
டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிறுவுனரும், அதிபருமான டேவிட் பீரிஸ் மற்றும் குழுமத்தின் அனைத்தப் பணியாளர்களின் ஒன்று கூடலுடன் இந்த வெற்றிப் பயணத்தின் கொண்டாட்டம் பண்டாரகம பேர்ள் பேயில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த 1,600 பணியாளர்கள் மத்தியில் சவால்களை வெற்றிகொண்டு அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னேறிச் செல்லுவதை ஊக்கப்படுத்தும் வகையில் அதிபர் திரு.பீரிஸ் ஆற்றிய உரை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. இதற்கு மேலதிகமாக 30 வருட சேவையைப் பூர்த்திசெய்த ஆரம்பகாலப் பணியாளர்கள் 15 பேரும் கௌரவிக்கப்பட்டனர்.
1985ஆம் ஆண்டு ரிச்சட் பீரிஸ் மோட்டார் கம்பனி கூட்டிணைக்கப்பட்டதுடன் DPMC ஆரம்பமாகிறது. 1994ஆம் ஆண்டு முகாமைத்துவம் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி எனப் பெயர் மாற்றம்பெற்று 195 பணியாளர்களுடன் அதன் செயற்பாடு தொடங்கப்பட்டது.