பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களுடன் ஓர் உரையாடல்’ நிகழ்வு அண்மையில் தர்கா நகர் அல் ஹம்றா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் ஆலோசகர்களுள் ஒருவரான பன்னூலாசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் கலந்து சிறப்பித்தார்.
ஹாபிஸ் இஸ்ஸதீனின் தலைமை உரையைத் தொடர்ந்து ஒன்றியத்தின் தலைவர் றபீஸ் ஹம்ஸா அறிமுகஉரை நிகழ்த்தினார். நிகழ்வில் உரையாற்றிய சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத், தமிழ் மொழி மற்றும் அறிவிப்புத்துறை தொடர்பில் விரிவாக கருத்துகளை பரிமாறினார். கலந்துரையாடல் நேரத்தில் சபையோர் பலர் கேட்ட கேள்விகளுக்கு அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் பதில்களை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றிய நிர்வாகிகளினால் அவருக்கு சினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.