தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்றுக் (22) காலை இடம்பெற்ற நிலச்சரிவு ஒன்றில் குறைந்தது 47 பேர் புதையுண்டுள்ளனர்.
சவோதொங் நகரில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் அங்கு நிலவும் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலைக்கு மத்தியில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இடிந்த கட்டங்களில் மீட்பாளர்கள் தேடுதலில் ஈடுபட்டிருக்கும் வீடியோக்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அந்தப் பகுதியில் இருந்து 500க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 18 குடும்பத்தைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் மலைகளைச் சூழவிருக்கும் தொலைதூர பிராந்தியங்களில் நிலச்சரிவுகள் வழக்கமாகும். 2013 இல் இதே சவோதொங் நகரின் சென்சியோங் பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.