Tuesday, May 21, 2024
Home » காவத்தையில் கசிப்புடன் இரு சந்தேகநபர்கள் கைது

காவத்தையில் கசிப்புடன் இரு சந்தேகநபர்கள் கைது

by Gayan Abeykoon
January 17, 2024 8:10 am 0 comment

காவத்தை, கெட்டேதென்ன பிரதேசத்தில் கசிப்பு அடங்கிய 43 போத்தல்களுடன் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பின் ஒரு நடவடிக்கையாக கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இச்சந்தேக நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டு கசிப்புடன் இவர்களைக் கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 32,000 மில்லிலீற்றர் கசிப்பை கைப்பற்றியதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து தம்மால் முன்னெடுக்கப்படுமெனவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT