Sunday, May 19, 2024
Home » கிழக்கு ஆளுநர் – IMF குழு சந்திப்பு; கிழக்கின் சேவைகளுக்கும் பாராட்டு

கிழக்கு ஆளுநர் – IMF குழு சந்திப்பு; கிழக்கின் சேவைகளுக்கும் பாராட்டு

by damith
January 15, 2024 11:27 am 0 comment

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் சிரேஸ்ட பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் IMF வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான், சிரேஸ்ட பொருளாதார நிபுணர் சோபியா ஜாங், ஹுய் மியாவ் (சிரேஸ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்கிரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT