இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெறுகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சிக்கந்தர் ராசா 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இலங்கை அணிக்கு 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.