Saturday, May 11, 2024
Home » தம்பலகாமத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்

தம்பலகாமத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்

- மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

by Prashahini
January 11, 2024 8:25 am 0 comment

கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியான அடை மழை காரணமாக பாலம்போட்டாறு ,பத்தினிபுரம் ,இக்பால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT