Sunday, May 12, 2024
Home » இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு

இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு

- குடியிருப்பு பகுதியில் தூர்நாற்றம் வீசியதால் சந்தேகம்

by Prashahini
January 10, 2024 9:55 am 0 comment

பொலநறுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களப் பிரிவுக்குட்பட்ட, கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவின் கித்துளுத்து பகுதியில், நேற்று (9) காட்டு யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் தூர்நாற்றம் வீசியதை அடுத்து, பிரதேசவாசி ஒருவர், கந்தளாய் அக்போபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இத்தகவலை , பொலன்னறுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களப் பிரிவுக்கு பொலிஸார் வழங்கியதை அடுத்து, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து, வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினர் கருத்து தெரிவிக்கையில்,

பொலிஸார் வழங்கிய தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்று, இறந்த நிலையில் கிடந்த காட்டு யானையின் உடலை தாம் மீட்டுள்ளதாகவும், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்பே, இறப்புக்கான காரணத்தை கூற முடியும் எனவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கிண்ணியா மத்திய நிருபர் – கியாஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT