371
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகளான பிரித்தானிய இளவரசி Anne மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(10) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இளவரசி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது இளவரசி Anne, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இளவரசியுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸ் நாட்டிற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.