இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 209 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைவர் Craig Ervine அதிகபட்சமாக 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் மழை காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
போட்டி இடை நிறுத்தப்பட்டபோது, 209 என்ற ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.