179
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது யாழ். விஜயத்தின்போது க. பொ. த சாதாரண தரத்தில் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடமும் தமிழ்மொழி மாணவர்களுள் முதலிடமும் பெற்ற யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி யைச் சேர்ந்த அக்ஷ்யா அனந்த சயனன் என்ற மாணவியை சந்தித்து பாராட்டி நினைவுப் பரிசையும் வழங்கினார். அத்துடன் இந்து மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவியையும் பாராட்டி நினைவுப் பரிசையும் வழங்கினார். யாழ். நல்லூர் ரியோ ஐஸ்கிறீம் நிறுவனத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பொதுமக்கள் சிலரையும் ஜனாதிபதி சந்தித்து உரையாடினார்.