Sunday, May 12, 2024
Home » யாழ்.வல்லிபுரம் காட்டு பகுதிக்குள் இருந்து 84 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்.வல்லிபுரம் காட்டு பகுதிக்குள் இருந்து 84 கிலோ கஞ்சா மீட்பு

by Prashahini
January 8, 2024 10:17 pm 0 comment

யாழ்ப்பாணம் – வல்லிபுரம் காட்டு பகுதியில் இருந்து 84 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் இன்று (08) மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த அதிரடி படையினர் , காட்டு பகுதிக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கஞ்சா போதைப் பொருளை மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று 48 கிலோ அபின் போதைப்பொருளும், 28 கிலோ கேரள கஞ்சாவும் வல்லிபுரம் கடற்கரையில் இருந்து மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT