242
தம்பலகாமம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ குளத்தின் நீரேந்து பகுதியில் ஏற்பட்ட கசிவு கடற்படையினரின் உதவியுடன் சீர்செய்யப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களம் ஊடாக குளப்பகுதியின் நீர் கசிவு தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு ஆறுகளின் கிளைகளும் திறக்கப்பட்டதால் இக்குளத்தின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கல்மெடியாவ குளத்தின் சுமார் 200 மீற்றர் தூரம் கொண்ட நீரினுள் கடற்படையினர் சென்று நீர்கசிவு தொடர்பில் ஆராய்ந்து அதனை சீரமைத்துள்ளனர்.
(தம்பலகாமம் குறூப் நிருபர்)