இரத்தினபுரியின் கெஹேல்ஓவிட்டிகம வம்பட்டுவத்த பிரதேசத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பு அறையொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் நேற்று முன்தினம் (28) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டன. இளம் தாயான சிவநாதன் வசந்தகுமாரி (வயது 22) மற்றும் இவரது இரண்டு வயது மகனதும் சடலங்களே மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாய் தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தாரா? என தாம் சந்தேகிப்பதுடன், இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளம் தாயின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியேறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்