மாலைதீவுக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் நேற்று (29) காலை 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. ஆயினும், இதனால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பு இல்லையென, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (Geological Survey & Mines Bureau) தெரிவித்தது.
முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிச்டர் (Richter scale) அளவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0ஆக ரிச்டர் (Richter scale) அளவுகோலில் பதிவாகியுள்ளன.
இரண்டாவது மற்றும் நான்காவது நிலநடுக்கங்கள் (ரிச்டர் அளவில் 5.2 மற்றும் 5.0) 10 கிலோமீற்றர் ஆழத்திலும், மூன்றாவது நிலநடுக்கம் (5.8 ரிச்டர் Richter scale அளவில்) 7.7 கிலோமீற்றர் ஆழத்திலும் பதிவாகியதாகவும் கூறப்பட்டுள்ளன.