மரண அச்சுறுத்தல் விடுத்து 5 கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கிணங்க முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து அங்கொட பிரதேசத்தில் வைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 47 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
சந்தேக நபர் மற்றும் முறைப்பாட்டாளருக்கு இடையே காணி தொடர்பான சச்சரவு நிலவுகிறது.இதனால், வெளிநாட்டில் வசிக்கும் சர்ச்சைக்குரிய அவரது உறவின ருக்கு இவர், இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக விசாரணைகளில் தெரிய வருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)